கோவையில் "MSME EXPO -2017" டிச.15-யில் துவக்கம்

கோவை, டிசம்பர் 5

எம்.எஸ்.எம்.இ - டிஐ, கோயம்புத்தூர் சிட்கோ இன்டஸ்ட்ரீயல் எஸ்டேட் உற்பத்தியாளர் சங்கம் (கொடிசியா) உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை நடத்த உள்ளன.

எம்.எஸ்.எம்.இ பிரிவில் முன்னணி உற்பத்தி மையமாக இந்தியா திகழும் வகையில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப்  இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, ZERO DEFECT ZERO EFFECT போன்ற திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த எம்.எஸ்.எம்.இ  துறையானது அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கணிசமாக பங்களிப்பு செய்து வருகிறது.

அதன்படி, எம்.எஸ்.எம்.இ -டிஐ, கொடிசியா உடன் இணைந்து "MSME EXPO -2017" என்ற கண்காட்சியினை வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு தேதிகளில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

MSME-EXPO 2017 மூலம் இந்தியாவின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பல பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 80-க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ  சிறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, அவற்றின் எந்திர வசதிகள் மற்றும் 20 முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன. புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.

மேலும், இலவச கருத்தரங்கைத் தவிர இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...